இன்று வானத்தைப் பார்க்க மறக்காதீர்கள்! சூரிய அஸ்தமனத்திற்கு பின் நிகழவுள்ள அதிசயம்
இன்றைய தினம்(03.03.2026) விண்ணில் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
இதன்போது, சந்திரன் செப்பு நிறத்தில் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதால் இது ‘இரத்தச் சந்திரன்’ (Blood Moon) என அழைக்கப்படுகிறது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி சரியாக வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.
தென்படும் நேரம்
பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வளைத்து சந்திரனின் மீது விழச் செய்வதால், சிவப்பு நிற ஒளி மட்டும் சந்திரனைச் சென்றடைந்து அதைச் சிவப்பாகக் காட்டுகிறது.

முழுமையான கிரகணம் 58 நிமிடங்கள் நீடிக்கும்.
இதன்படி, இந்திய நேரப்படி (IST) மாலை 4:34 மணி முதல் 5:32 மணி வரை முழு கிரகணம் நிகழும். அதே போன்று, ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பகுதி மற்றும் அமெரிக்க கண்டங்களில் இது தென்படும். இதுவொரு 'செலினெலியன்' (Selenelion) நிகழ்வாகும்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இந்நிலையில், வளிமண்டல ஒளிவிலகல் காரணமாகச் சூரியன் உதிப்பதையும், கிரகணம் பிடித்த சந்திரன் மறைவதையும் ஒரே நேரத்தில் காண முடியும்.

சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது.
நீங்கள் இதைத் தவறவிட்டால், அடுத்த முழு சந்திர கிரகணத்தைக் காண 2028 டிசம்பர் 31 வரை காத்திருக்க வேண்டும். இருப்பினும், 2026 ஆகஸ்ட் மாதம் ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam