இலங்கையில் உச்சம் தொட்ட தக்காளி விலை
உள்ளுர் சந்தையில் மலையக மற்றும் கீழ்நாட்டு மரக்கறிகள் அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறி வகைகளின் விலைகளை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மைய ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் விலை ரூ 650 ரூபா முதல் 700 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறிகள் குறைந்த விளைச்சலுக்கு முக்கியக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam