யாழ்ப்பாணத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்மேற்கு மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட அகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கே 410 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 12 மணி நேரத்தில் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் படிப்படியாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரான வானிலை
இதேவேளை ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.
எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.