சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் கிடைக்கவில்லை - அரசாங்கம்
இலங்கையர்கள் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
600,000 குப்பி தடுப்பூசி சீனாவிலிருந்து இலங்கைக்கு நாளை வரும் என்று அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எனினும் ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகள் இலங்கையை தளமாகக் கொண்ட சீன நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு என்பன இன்னும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதலை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சினோர்பாம் தடுப்பூசியின் 4 ஆம் கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் ஆங்கில மொழியில் கிடைக்கவில்லை.
இதன் காரணமாகவே இந்தத் தடுப்பூசியை உலகளவில் பயன்படுத்த உலக சுகாதார மையம், தனது பரிந்துரையை வழங்கவில்லை.
இந்த பரிந்துரைக் கிடைத்ததும் இலங்கையிலும் அதனைப் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
