மனைவியின் வயிற்றில் இருந்த சிசுவைக் கொலை செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்
கர்ப்பிணியாகிய தனது மனைவியின் தலையிலும் அடி வயிற்றிலும் தாக்கி வயிற்றிலுள்ள சிசுவை கொலை செய்ய முயன்ற நபரை இந்த மாதம் 24 ஆம் திதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். வண்ணம்குளம் உட்டிமடுவ திறப்பனய பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய திறப்பன பொலிஸ் வழக்குப் பிரிவு குறிப்பிடுகையில், சந்தேக நபரின் மனைவி 40 வயதான இரு பிள்ளைகளின் தாய். அவரால் அனுராதபுர போதனா மருத்துவமனை பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேக நபர் அம்முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு மனைவியை அச்சுறுத்துவதற்காக மருத்துவமனைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், சந்தேக நபர் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து "நீ உயிருடன் இருந்தால் என் மீது வழக்குத் தொடரப்படும்" என்று கூறி. மனைவியை கொடூரமாகத் தாக்கி பாழடைந்த இடத்திற்கு இழுத்துச் சென்று அடிவயிற்றிலும் தாக்கியுள்ளார் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
