மரண பயமின்றி வாழ வேண்டும்! ஆதரவாளர்களுக்கு மத்தியில் இம்ரான்கான் உரை
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் இம்ரான் கான் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தார்.
இதன்பின்னர் நடத்தப்பட்ட தனது முதல் பொதுக் கூட்டத்தில் ஏராளமான ஆதரவாளர்களுக்கு மத்தியில் இம்ரான் கான் உரையாற்றியுள்ளார்.
அவ் உரையில், நாம் மரண பயமின்றி வாழ வேண்டும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
ராவல்பிண்டி நகரில் நேற்று (26.11.2022) நடைபெற்ற பேரணியில் கொடிகள் மற்றும் அடையாளங்களை ஏந்தியபடி ஏராளமானோர் கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.
துப்பாக்கி தாக்குதல்
இந்த மாத ஆரம்பத்தில் இம்ரான்கான் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்களே காரணம் என அவர்
குற்றம் சாட்டியிருந்தார்.
எனினும் அரசாங்க அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரே சந்தேக நபர் என்று அவர்கள் விபரிக்கும் ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைக் காட்டுவதற்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
கைக்கடிகாரங்கள், மோதிரம் உட்பட பதவியில் இருந்தபோது அவர் பெற்ற, மற்றும் விற்பனை செய்த பரிசுகளின் விபரங்களைத் துல்லியமாக அறிவிக்கத் தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் தாம், எந்தத் தவறையும் செய்யவில்லை என்று மறுத்து, தனக்கு எதிரான
வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.