சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சமத்துவக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி மற்றும் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு சமத்துவக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
சமத்துவக்கட்சி சார்பாக பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி, பருத்தித்துறை நகரசபை போன்றவற்றுக்காக 12உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
சத்தியப்பிரமாண நிகழ்வு
பூநகரி பிரதேச சபைக்காக 03உறுப்பினர்களும் ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்காக 03உறுப்பினர்களும், கரைச்சி பிரதேச சபைக்காக 04உறுப்பினர்களும் , பருத்தித்துறை நகர சபைக்காக 02உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழரசுக்கட்சிக்கு இப்பொழுதுள்ள விமர்சனத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் ஜனநாயக தமிழ் கூட்டணியுடன் சேர்வதே ஒரே வழி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன முருகேசு சந்திரகுமார் தெரிவிப்பு சமத்துவக்கட்சி சார்பாக உள்ளூராட்சி மன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், பல வரலாற்று மாற்றங்கள் நிகழும் உள்ளூராட்சி சபை தேர்தலாக இந்த தேர்தல் விளங்குகின்றது. எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஓரணியில் பதவிக்காக சேர முற்படுகின்றனர்.
ஏற்கனவே சமத்துக்கட்சி ஜனநாயக தமிழ்க்கூட்டணியில் ஒரு பங்காளிக்கட்சியாகவுள்ளது.
தமிழ் கட்சிகள்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி சூழ்ச்சியாக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றது. அது தமிழ் மக்களுக்கு விரோதமான என்ற ரீதியில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில்லேயே கூட்டணி ஒருவாக்கப்பட்டது.
கூட்டணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழர்பேரவையுடன் கூடிய அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்சும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன.
இவை உள்ளூராட்சிக்கு மட்டும் இல்லை அடுத்த வருடம் தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்புக்கும் தமிழரின் சுயாட்சியை தமிழ் கட்சிகளின் ஒருமித்த கருத்தாக வலியுறுத்தும் தமிழரசுக்கட்சி கூட்டு சேரவில்லை தற்போது ஆட்சியை பிடிப்பதற்காக சேரக்கூடாத கட்சியுடன் சேர முற்படுகின்றமையானது.
தமிழ் மக்களின் வெறுப்பை அடைந்துள்ளது. எனவே இந்த வெறுப்பு விமர்சனத்திற்கு தீர்வாக தமிழரசுக்கட்சி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியுடன் இணைய வேண்டும் என தெரிவித்தார்.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!





வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
