பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நபர்! கூட்டமைப்பினர் ஆறுதல் தெரிவிப்பு
கொரோனாச் சட்டத்தை மீறிய குற்றத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் பாணந்துறை வீட்டுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று விஜயம் செய்தனர்.
கொழும்பிலிருந்து விஜயம் செய்த மேற்படி எம்.பிக்கள், உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் உடனடியாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், இதேபோன்றதொரு மற்றுமொரு சம்பவம் மட்டக்களப்புப் பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri