பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நபர்! கூட்டமைப்பினர் ஆறுதல் தெரிவிப்பு
கொரோனாச் சட்டத்தை மீறிய குற்றத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் பாணந்துறை வீட்டுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று விஜயம் செய்தனர்.
கொழும்பிலிருந்து விஜயம் செய்த மேற்படி எம்.பிக்கள், உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் உடனடியாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், இதேபோன்றதொரு மற்றுமொரு சம்பவம் மட்டக்களப்புப் பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 17 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam