வரி இலக்கத்தால் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை - செய்திகளின் தொகுப்பு
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த பதிவு செய்தவர்களுக்கு மற்றுமொரு புதிய வரி இலக்கங்கள் வழங்கப்படுவதால் வரி செலுத்துவோர் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டு வரி எண்களை பெற்ற வரி செலுத்துவோர் ஒருவருக்கு இரண்டு வரி பதிவு எண்களை வழங்கியதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெறப்பட்ட வரி எண்ணிற்கமைய, வரிக் கணக்குகளை மின்னணு முறையில் ஒன்லைனில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு முறையானது, நாட்டின் ஏழை மக்களுக்கு இது போன்ற ஒன்லைன் வசதிகளோ, அது தொடர்பான தொழில்நுட்ப அறிவோ இல்லாததால், கடும் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் வரி செலுத்துவோர் தெரிவித்துள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam