TIN எண் பெற அலுவலகங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்
வங்கி வட்டிக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் போது வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த நாட்களில், அடையாள எண்ணைப் பெறுவதற்காக, உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுக்கு தினமும் 2000க்கும் மேற்பட்டோர் வருவதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அலுவலகங்கள் பரபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறைவாக வருமானம்
18 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வங்கி வட்டிக்கு விதிக்கப்படும் வரியை திரும்பப் பெறலாம், மேலும் விண்ணப்பக் கடிதத்துடன் TIN எண்ணைச் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் வங்கி வட்டிக்கு 10 சதவீதம் பிடித்தம் செய்யும் வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.