சப்ரகமுவ ஆளுநர் பதவி விலகல்
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பெகடுவ தான் பதவி விலகல் செய்வதாக அறிவித்துள்ளார்.
பதவி விலகுவது குறித்த கடிதத்தை அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் தாம் பதவி விலகல் செய்வதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆளுனர்கள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் திகதி டிகிரி கொப்பெகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், டிகிரி கொப்பெகடுவ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |