எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு முதலில் டொலரை கட்டச்சொல்லுங்கள்: அதியுச்ச கோவத்தில் மக்கள் (Video)
இலங்கையில் எரிபொருள், எரிவாயு, மண்ணெண்ணெய் இல்லை. அது எடுக்க டொலர் இல்லை என்கிறார்கள். சாராயமும் பியரும் சிகரெட் எப்படி நாட்டுக்கு வருகிறது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
சாராயம், பியர், சிகரெட் என்பவற்றை நாட்டுக்கு எடுப்பதற்கு மட்டும் டொலர் எங்கிருந்து வந்தது? மனிதர்கள் வாழ்வதற்கு என்ன தேவை என்பதை இந்த அரசாங்கம் சிந்திக்கவேண்டும்.
[
அவற்றுக்குத்தான் டொலரை முதலில் போடவேண்டும். சாராயமும், பியரும், சிக்ரெட்டும் நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் காணப்படுகின்றன. அவற்றைக் கொள்வனவு செய்யவும் டொலர் தேவைதானே.
அவை இலங்கையில் உற்பத்தியாகிற பொருட்களுமில்லை. ஆகவே அவற்றை தட்டுப்பாடாக்கி அத்தியாவசியமானவற்றை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாமே. ஏன் இந்த படித்தவர்களுக்கு மூளை வேலைசெய்யவில்லை'' என கோபத்துடன் கேள்வியெழுப்பியுள்ளனர்.