உண்மைகளை எதிர்கொள்ளத்தயார்! எதிர்க்கட்சிக்கு நீதி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத் தவிடுபொடியாக்கத் தயார் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல்
சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தடுப்பதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் நீதி அமைச்சர் தனது தார்மீகப் பொறுப்பையும், அமைச்சுக்குரிய கடமைகளையும் சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியே எதிர்க்கட்சி இந்தப் பிரேரணையை முன்வைக்கவுள்ளது.
எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அரசைப் பலவீனப்படுத்தவும், அரசியல் ஆதாயம் தேடவும் சில தரப்பினர் இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைக்கின்றனர்.
நம்பிக்கையில்லா பிரேரணை
எனக்கு எதிராகக் கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில் தவிடுபொடியாகும். இவ்வாறான தந்திரங்கள் மூலம் அரசின் செயற்பாடுகளை ஒருபோதும் முடக்க முடியாது.

சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிச் செல்லவில்லை. இவ்வாறான விமர்சனங்கள் என்னை மேலும் வலுவான முடிவுகளை எடுப்பதற்கே தூண்டுகின்றன.
உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் எனக்கு, இதுபோன்ற அரசியல் சவால்கள் ஒரு பொருட்டல்ல." - என்றார்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நீதி அமைச்சர், சிறைச்சாலைத் துறை மற்றும் நீதி அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam