நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வங்களா விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்த நிலைமை இலங்கையின் கிழக்கு பகுதியில் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் அநேக பகுதிகளில் பிற்பகலில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இடியுடனான மழை பெய்யும் போது ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும், இடி மின்னல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் இதனால் மக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam