முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முச்சக்கரவண்டிகளுக்கு மேலும் பத்து லீட்டர் எரிபொருளை வழங்க அனுமதித்தால் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீட்டர் அதிகரிப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசகர் தீர்மானத்திற்கு வந்ததாக ஜயருக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேலதிக எரிபொருள் தொகையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை
எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அவர் பரிந்துரை
செய்துள்ளதாகவும் ஜயருக் தெரிவித்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 13 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri