யாழில் ஏற்பட்ட விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி
முச்சக்கரவண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான கொடிகாமம் - வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞனே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்குத் திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி மோதியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி 50 மீற்றர் வரை தள்ளிச் சென்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டி மோசமாகச் சேதமடைந்துள்ளது.
அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam