கடையொன்றில் பதுக்கப்பட்டிருந்த மூவாயிரம் லீட்டர் டீசல் மீட்பு: பொலிஸார் அதிரடி நடவடிக்கை (Photos)
வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல்
வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடையொன்றினை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த கடையின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.
ஒருவர் கைது
இதனையடுத்து குறித்த 15 பெரல்களில் காணப்பட்ட 3000 லீட்டர் டீசல்களும் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடையின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

கனடாவில் ஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி! திணறும் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ Manithan

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri
