கடையொன்றில் பதுக்கப்பட்டிருந்த மூவாயிரம் லீட்டர் டீசல் மீட்பு: பொலிஸார் அதிரடி நடவடிக்கை (Photos)
வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல்

வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடையொன்றினை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த கடையின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.
ஒருவர் கைது

இதனையடுத்து குறித்த 15 பெரல்களில் காணப்பட்ட 3000 லீட்டர் டீசல்களும் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடையின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.




ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam