குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய விடுதி
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபாடுவ பிரதேசத்தில் பாலியல் தொழில் விடுதியொன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபசார விடுதியை நிர்வகித்து வந்த 40 வயது நபரும், விபச்சார விடுதியை நடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த 37, 52 வயதுகளையுடைய இரு பெண்களுமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் நீர்கொழும்பு, கம்பஹா, மொரட்டுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட
சுற்றிவளைப்பின்போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.