கொழும்பில் ஆபத்தான கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மூவர் குணமடைவு
கொழும்பில் தெமடகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் குணமடைந்துள்ளனர்.
இருவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட யாரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் இல்லை. எனவே பொதுமக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை புறக்கணிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இந்திய கோவிட் திரிபான டெல்டா திரிபுடன் தெமட்டகொடை பகுதியில் 5 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.