துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் மூன்று பொலிஸாருக்கு நேர்ந்த கதி!
பொலிஸ் பயிற்சி கலாசாலையில் நடைபெற்ற, துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றுள்ளது.
பயிற்சி
பயிற்சி நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, துப்பாக்கிச் சன்னம் அங்கிருந்த தகடு ஒன்றின் மீது பட்டு அதன் துண்டுகள் வீசியெறியப்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது அதிரடிப்படையின் களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
