'ரெட்டா' உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை
'கோட்டா கோ கம' போராட்டச் செயற்பாட்டாளர்களில் மேலும் மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
'ரெட்டா' என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கே இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றனால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை

'ரெட்டா' என அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ரத்திந்து சேனாரத்ன கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் பெதும் கேர்னர் தொடர்பில் தாமாகவே வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (01) பிற்பல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு (CCD) வந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய விசேட பிரிவின் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வந்து ரத்திந்து சேனாரத்னவை கைது செய்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam