22 வயது மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றனால் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பதுளை வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
71 வயதுடைய நபர், 72 வயதுயடைய அவரது மனைவி மற்றும் 22 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.