இராணுவத்தினரிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள் பறிப்பு
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் மூன்று இராணுவத்தினரிடம் இருந்து மூன்று ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆறு மெகசீன்களை ஆர்ப்பாட்டகாரர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெல்லவாய இராணுவ முகாமின் துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்களுக்கு மேலதிகமாக இரண்டு இராணுவத்தினரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் நான்கு மெகசீன்களை ஆர்ப்பாட்டகாரர்கள் பறித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரும்பு கம்பிகளால் இராணுவத்தினரின் தலையில் தாக்குதல் நடத்தி விட்டு துப்பாக்கிகள் பறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பறித்து செல்லப்பட்ட துப்பாக்கிகள் சம்பந்தமாக வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
