எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்! அமைச்சரின் கோரிக்கை
அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
டீசல் கப்பல் நேற்று வரவழைக்கப்பட்டதன் மூலம் போதியளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் இந்திய கடன் திட்டத்தின்கீழ் மூன்று கப்பல்கள் அடுத்த 2 வாரங்களில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு இதுவரை 400,000 மெற்றிக் தொன் எரிபொருளை இந்தியா வழங்கியுள்ளது.
இதன்படி நேற்று பன்னிரண்டாவது எரிபொருள் கப்பல் இலங்கையை வந்தடைந்தது.

எனவே, நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்களின் விநியோகம் முடியும் வரை எரிபொருளுக்காக வரிசையில் நிற்கவோ அல்லது அதிகமாக நிரப்பவோ வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri