ஆபத்தானதாக மாறியுள்ள இலங்கையின் மூன்று மாவட்டங்கள்
கோவிட் பரவலில் கொழும்பு, கம்பஹா, குருணாகல் மாவட்டங்கள் மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக மாறியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் தினமும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.
இந்த மாவட்டங்களை தவிர இலங்கையில் பல பிரதேசங்களில் கோவிட் கொத்தாணிகள் ஏற்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இலங்கைக்கு இது மிகவும் ஆபத்தான நிலைமை. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
வார இறுதி நாட்களில் ஓரளவுக்கேனும் மக்களின் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
