அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள் 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்த
மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
