நள்ளிரவில் வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
வவுனியா, வைரவபுளியங்குளம், 6ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
நள்ளிரவில் வீடுபு குந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் கொண்ட குழு, உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் மீது கம்பியினால் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த கைத்தொலைபேசிகள், பேஸ், மோட்டார் சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம், சிசிடிவி வீடியோ சேமிப்பு பெட்டகம் என்பவற்றை எடுத்து சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த தொலைகாட்சி, சிசிடிவி என்பவற்றையும் அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததில் நேற்றைய தினம் சந்தேகநபர்கள் மூவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri