கடுவலை கொலை தொடர்பில் மூவர் கைது
கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 8ஆவது மைல்கல் பிரதேசத்தில் நேற்று (02.08.2023) ஆடைகளின்றி மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 29 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு வழிவகுத்துள்ளதாகவும், முல்லேரியா பகுதியில் வைத்து இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கி கொலை செய்யப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் மூலம் குறித்த பகுதியில் அவரின் சடலம் கைவிட்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் கம்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
