கனடாவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்தியர்கள்
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு மிரட்டி பணம் பறிக்கும் அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக வெளியான தகவல் குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில்,
“கனடாவில் இந்திய சமூகத்தினரை மிரட்டி பணம் பறிப்பதாக வெளியான தகவல் மிகவும் கவலைக்குரிய விடயம்.
#WATCH | On Indian Nationals getting extortion calls in Canada, MEA Spokesperson Randhir Jaiswal says, "Indians getting extortion calls in Canada is concerning..." pic.twitter.com/YGxO0NKnxb
— ANI (@ANI) January 4, 2024
இந்திய மக்களுக்கு அச்சுறுத்தல்
மேலும், நாம் விவாதிக்க பல பிரச்சினைகள் உள்ளன.

இந்நிலையில், கோவில் ஒன்று கனடாவில் தாக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை எழுந்தது.
பொலிஸார் விசாரித்த பின்னர், கோவில் வளாகத்தில் அத்துமீறிய நபர் உளவியல் பாதிப்பு கொண்டவர் என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.” என்றார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமின்றி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்திய சமூக மக்களுக்கு அச்சுறுத்தும் அழைப்புகள் வருவாதாக வெளியான தகவல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரந்தீர் ஜெய்ஸ்வால், கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan