முள்ளிவாய்க்கால் வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (Photos)

Sri Lanka Army Sri Lanka Police Mullivaikal Remembrance Day Journalists In Sri Lanka
By Kanamirtha May 14, 2022 03:37 PM GMT
Report

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் பொலிஸாரும் காவல் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குத் திரும்பும் சந்தியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (Photos) | Threat Journalist Mullivaikkal Memorial Cover News

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு சென்ற ஊடகவியலாளர் நினைவுமுற்றத்தை காணொளிப்பதிவு செய்ததன் பின்னர் திரும்பிச் சென்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குத் திரும்பும் சந்தியில் நின்ற பொலிஸார் இராணுவ புலனாய்வாளர்களின் தூண்டுதலின் பெயரில் ஊடகவியலாளரை மறித்துள்ளனர். 

ஊடகவியலாளர், ”எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்டபோது எந்தவித பதிலையும் சொல்ல முடியாது நின்ற பொலிஸார் சிறிது நேரத்தில் ஊடகவியலாளரின் அடையாள அட்டையைக் கோரியுள்ளனர். 

அடையாள அட்டையை வழங்கிய ஊடகவியலாளர் ஏன் என்று கேட்டபோது, காணொளி எடுத்தீர்களா எனக் கோரி தங்களுடைய பதிவேடு ஒன்றில் விபரங்களைப் பதிவு செய்துள்ளனர். 

முள்ளிவாய்க்கால் வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (Photos) | Threat Journalist Mullivaikkal Memorial Cover News

இவ்வாறான பின்னணியில் பொலிஸாரின் உடையை இந்த செயற்பாடுகள் தொடர்பில் காணொளிப் பதிவு செய்ய முயன்ற போது உங்களுடைய வாகனத்தின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்களைக் காண்பிக்குமாறு பொலிஸார் கோரி அவற்றையும் வாங்கி பதிவுசெய்து அனுப்பியுள்ளனர்.

ஊடகவியலாளர் அவ்விடத்துக்கு செல்லும்போது அங்கு இராணுவ புலனாய்வாளர்கள் பொலிஸாருடன் கலந்துரையாடிய வண்ணம் இருந்ததாகவும் அவர்களுக்குத் தகவல்களை வழங்கவே பொலிஸார் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில், மக்களை அச்சமடையச் செய்யும் நோக்குடன் பொலிஸார் அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (Photos) | Threat Journalist Mullivaikkal Memorial Cover News

இதன் ஒரு அங்கமாகவே குறித்த பகுதிக்குச் சென்றுவந்த ஊடகவியலாளரை மறிந்த பொலிஸார் ஊடகவியலாளரிடம் ஆவணங்களைக் கோரி ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில் பதிவு செய்ததன் ஊடாக குறித்த தகவல்களை புலனாய்வாளர்களும் இராணுவத்தினருக்கும் வழங்குவதற்காகவே பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் விபரங்களைப் பெற்றால் அது பிரச்சினையாக வரும் என்பதால் அவர்களின் எடுபிடிகளாக பொலிஸார் செயற்படுவதாக குறித்த ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US