முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு
முல்லைத்தீவு - சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான வெடிக்காத துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்றையதினம் (14.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதி காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
வெடிக்காத நிலையில்..
அதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது T56ரக துப்பாக்கி ரவைகள் உர பையினில் இருப்பது அவதானிக்கப்பட்டிருந்தது.
சந்தேகத்திற்கிடமான வகையில் மீட்கப்பட்ட உரபையில் இருந்துT56ரக துப்பாக்கி ரவைகள் 1400 வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை முல்லைத்தீவு பொலிஸார் மீட்டெடுத்து பாெலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவை வெடிக்காது பழுதடைந்த நிலையிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
