முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு
முல்லைத்தீவு - சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான வெடிக்காத துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்றையதினம் (14.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதி காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
வெடிக்காத நிலையில்..
அதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது T56ரக துப்பாக்கி ரவைகள் உர பையினில் இருப்பது அவதானிக்கப்பட்டிருந்தது.

சந்தேகத்திற்கிடமான வகையில் மீட்கப்பட்ட உரபையில் இருந்துT56ரக துப்பாக்கி ரவைகள் 1400 வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை முல்லைத்தீவு பொலிஸார் மீட்டெடுத்து பாெலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவை வெடிக்காது பழுதடைந்த நிலையிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam