இலங்கையில் ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் - பலர் உயிரிழக்கும் அபாயம்
இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்திய ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு தொற்றியவர்களில் 5 வீதமானோர் ஆபத்தான நிலைக்குள்ளாக கூடும் எனவும் 2 வீதமானோர் உயிரிழக்க கூடும் எனவும் இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை அதிகரிக்க கூடும் என சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் அவதானமின்றி செயற்பட்டால் இந்தியாவுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
