தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி (Photos)
தியாக தீபம் திலீபனின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தின் பல பகுதிகளில் இன்றும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.
இந்தநிலையில், தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கி நினைவேந்தல் வாகன ஊர்தி இன்று புங்குடுதீவிற்குச் சென்றது.
திலீபனுக்கு அஞ்சலி
புங்குடுதீவு, குறிகட்டுவான் பகுதியில் ஆரம்பித்த குறித்த நினைவேந்தல் ஊர்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளுக்கும் பவனியாகச் சென்றது.

இதன்போது மக்கள் திரண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 23.09.2023 (சனிக்கிழமை) மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.










சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam