மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவை(Thisara Iroshana Nanayakkara) எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் இன்றையதினம்(06) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீளவும் விளக்கமறியல்
திசர இரோஷன நாணயக்கார, கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கம்பஹா(Gampaha) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை இன்று(06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் மேற்கோண்ட விசாரணைக்கு பின்னர் அவரை 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 11 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri