இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன்

Sri Lankan Tamils Tamils Thol. Thirumavalavan Sri Lanka India
By Amal May 20, 2025 06:50 PM GMT
Report

இந்தியாவில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, அடைக்கலம் அளிக்க மறுத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, ஏமாற்றம் வெளியிடப்பட்டுள்ளது வி.சி.கே என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு மனிதாபிமான விழுமியங்கள் மற்றும் மனித கண்ணியத்தை மீறுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி ஏமாறும் தமிழர்கள்

ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி ஏமாறும் தமிழர்கள்

இலங்கைத் தமிழர்

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை, மீண்டும் உயிர்ப்பிக்கும் சதியில் ஈடுபட்டதாகக் கூறி, 2015 இல் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான சுபாஸ்கரன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வழங்கியது.

இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன் | Thirumavalavan On Indian Court Verdict

முன்னதாக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

இருப்பினும், 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுக்கு அமைய அவருக்கான தண்டனை ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: சீமான் உருக்கம்

ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: சீமான் உருக்கம்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

உயர்நீதிமன்றம், தண்டனையைக் குறைத்தபோதும்,  தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை உடனடியாக நாடு கடத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன் | Thirumavalavan On Indian Court Verdict

எனினும் சுபாஸ்கரனின் சட்ட ஆலோசகர், தமது கட்சிக்காரரின் தண்டனை முடித்தவுடன், இந்தியாவில் அவரைதங்க அனுமதிக்குமாறு வாதிட்டார், அவரது குடும்பம் இந்தியாவில் வசிப்பதையும் அவர்; காரணம் காட்டியிருந்தார்.

இருந்தபோதும், இந்திய உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஏதிலிகளுக்கு இந்தியா ஒரு சத்திரமாக இருக்க முடியாது என்றும், வேறு நாட்டில் அடைக்கலம் தேடுமாறும் தமது தீர்ப்பின்போது அறிவுறுத்தியது.

இந்தநிலையில் குறித்த தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன், நீதிமன்றத்தின் மொழி மற்றும் தீர்ப்பு அதிர்ச்சியூட்டுவதாக இருப்பதாகவும், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இந்தியாவின் நீண்டகால பாரம்பரியத்திற்கு முரணானது என்றும் கூறியுள்ளார்.

பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

தமிழ் ஏதிலிகள் 

உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு, மனிதாபிமானத்தின் கொள்கைகளையும், ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடுபவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும், இந்திய நாட்டின் தார்மீகக் கடமையையும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன் | Thirumavalavan On Indian Court Verdict

தண்டனைக்கு உள்ளாகி, இந்தியாவில் தமது குடும்பம் வசிக்கும் போது, அந்த குடும்ப தலைவருக்கு அடைக்கலம் மறுப்பது நியாயமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் மனிதாபிமான அடிப்படையில் தங்குமிடம் வழங்குவது ஒரு நாகரிக தேசத்தின் பொறுப்பு இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஏதிலிகள் மீது மிகவும் இரக்கமுள்ள அணுகுமுறையை எடுக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US