திருக்கேதீஸ்வர ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா(Photo)
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(06) புதன்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30ம் திகதி பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்றதை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை (5) மதியம் 12 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பூசைகள்
இதனையடுத்து சுவாமிகளுக்கான கிரியைகளும், யாகப் பூசைகளும் இடம்பெற்றதுடன் இன்று(6) காலை 9 மணி அளவில் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேகம்
இதன் போது குருக்கள் மற்றும் மக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் குறித்த
கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.