60 வயதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி
60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறு உடல் நல பிரச்சினைகள் மற்றும் தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
60 வயதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசியை வழங்குமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதனடிப்படையில், 60 வயதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் இராணுவ தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
இதனிடையே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan