கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலங்கள்! ஒரே நாளில் மட்டும் மூன்று மனித உடல்கள் மீட்பு - மேலதிக தகவல் வெளியானது (Video)
அடையாளம் காணப்பட்ட உடல்
கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து மீட்டகப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கொலன்னாவ மீதொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் பொலிஸாரின் விசாரணைகள் இன்னும் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பில் ஒரே நாளில் மட்டும் மூன்று மனித உடல்கள் மீட்பு
கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள எண்ணெய் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், குறித்த சடலமும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர்கள் கூறினர். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் எமது செய்தி சேவைக்கு மேலும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி......
வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டியில் சடலங்கள் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை