மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது கோவிட்-19 மரணம் பதிவானது!
மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது கோவிட்-19 மரணம் இன்றைய தினம் (11) பதிவாகியுள்ளது.
முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் முசலிப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை,எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பவதி தாயார் ஒருவர் கோவிட் அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல நோய் அறிகுறியுடன் வைத்தியசாலைக்குச் சென்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam