மட்டக்களப்பில் சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்: மக்களின் உதவியை நாடும் பொலிஸார் (photo)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
எனவே இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அறிவிக்குமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
வீடுகளில் இருந்து பொருட்கள் கொள்ளை
கடந்த அக்டோபர் 29ஆம் திகதி மட்டு. தலைமையகம், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி போன்ற பகுதிகளில் 4 வீடுகளில் 28 பவுண் தங்க ஆபரணங்களும் 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பணம், மடிக்கணணி, மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், புகைப்படத்தையும் வெளியிட்டு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
