மைத்திரியை சந்தித்த சீனத்தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சீன தூதர் கி ஷென்போங் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ வீதியில் உள்ள மைத்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக இக்கலந்துரையாடல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கொழும்பில் உள்ள சீன தூதர், முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை தனித்தனியாக சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டத்தின் அடிப்படையில், தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன் தான் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை ஒப்படைக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.