ரதன தேரருக்கு எம்.பி பதவியை வழங்குமாறு அச்சுறுத்தி கையெழுத்து பெற்றனர்! - தேரர் குற்றச்சாட்டு
கடந்த பொதுத்தேர்தலில் எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலியே ரதன தேரருக்கு வழங்கி, கையெழுத்திடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தன்னை அச்சுறுத்தியதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான பிரச்சினை பற்றி பேச வருமாறு அழைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டிற்குள் வைத்து தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும் சில தினங்கள் உண்ண உணவு , தண்ணீர் எதுவும் வழங்காமல், தடுத்து வைத்து, பலவந்தமாக கையெழுத்தை பெற்றுக்கொண்டதாகவும் விமலதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முற்றாக பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.