தடுப்பூசிக்கான ஒப்புதல் படிவம் குறித்து தமக்கு தெரியாது! சுகாதார அமைச்சு
கண்டி, குண்டசாலையில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் படிவம் குறித்து தமக்கு தெரியாது என இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன் வழங்கப்பட்ட இந்த ஒப்புதல் படிவத்தில் 'ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் முதல் அளவை மட்டுமே எடுக்க விரும்புகிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது.
எனினும் இது சுகாதார அமைச்சுக்கு தெரியாமலேயே நடந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் முதல் அளவை வழங்குவதற்கு முன்னர் கையொப்பங்களைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சகம் அத்தகைய ஒப்புதல் படிவத்தை வழங்கவில்லை என்று சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த சம்பவம் குறித்து விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹெரத் கூறினார்.
இந்த படிவங்கள் நேற்று தடுப்பூசி பெற தடுப்பூசி மையத்திற்கு வந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட்டன. இதற்கிடையில், ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்துவதற்கு தாம் பரிந்துரைத்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.
"ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள், இரண்டு அளவுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று சங்கத்தின் பேச்சாளர் கலாநிதி சமந்த ஆனந்தா கூறியுள்ளார்.
இதேவேளை "ஒப்புதல் படிவம்" என்று அழைக்கப்படும் படம் தற்போது சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
