அநுர முன்னிலையில் கோட்டாபயவை புகழ்ந்த தேரர்
கண்டியில் உள்ள அஹேலேபொல குழியானது ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான இடமாக மாற முடிந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் அநமதுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கண்டியில் உள்ள எஹேலேபொல வளவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது தேரர் மேலும் கூறுகையில்,
“கண்டியில் உள்ள அஹேலேபொல குழியை தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், பல முயற்சிகளுக்குப் பிறகு, அது ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான இடமாக மாற்றப்பட்டது.
தேசிய வரலாறு
தலதா மாளிகையின் தியவதன நிலமே இந்த விடயத்தில் கடுமையாக உழைத்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் இதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.
தனது வரலாற்றை நினைத்து வருந்தும் ஒரு தேசம் வலுவான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்க முடியாது.
எனவே, பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு தேசிய வரலாற்றையும் பாதுகாக்க வேண்டும்” என வலியுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
