மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்
நாட்டில் மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க(Sumith Wijesinghe) இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணை விற்பனை செய்யும் நடைமுறையானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட நாட்களாக ஐந்து லீற்றர் வரையறை நாட்டில் அமுலில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்வதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு ஐந்து லீற்றர் என்ற வரையறை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மண்ணெண்ணையை பயன்பாட்டுக்கும் வரையறைகள் விதிக்கப்படுவது குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
