எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இன்னும் எரிபொருள் இருக்கக்கூடும் - தர்ஷனி லஹந்தபுர
பல்வேறு உத்தரவாதங்களுக்கு மத்தியில், கொழும்பு கடலில் மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இன்னும் எரிபொருள் இருக்கக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான தர்ஷனி லஹந்தபுர, கப்பலில் பதுங்கு எரிபொருள் எஞ்சியிருக்கவில்லை என்று வெளிநாட்டு நிபுணர்கள் நம்புகின்றனர் எனக் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் கப்பலில் எரிபொருள் எஞ்சியிருக்கவில்லை என்பது 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, கப்பலின் உரிமையாளர்கள், இடிபாடுகளை அகற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுழியோடிகள் சென்று, கப்பலைப் பரிசோதனை செய்து அதில் எரிபொருள் இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கப்பலில் எரிபொருள் எஞ்சியிருந்தால், சிதைவுகளை அகற்றுவதற்கு முன் அதை வேறு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாத்தியமான எரிபொருள் கசிவைக் கண்டறிய ட்ரோன்களைப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் சிதைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்று லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
மூழ்கிய கப்பலின் சிதைவுகளை விரைவில் அகற்றவேண்டும். இந்த மூழ்கிய கொள்கலன்களின் காரணமாகக் கடலோர மீன்பிடித்தல் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் கடந்த மே மாதம் கொழும்பு கடலில் தீப்பற்றி பின்னர் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.