இலங்கையின் தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இருக்கும் ஒரேயொரு வழி இது தான்!
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சகல பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வே உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு, பால்மா, எரிபொருள், உரம் போன்றவற்றை மக்கள் கோரிய போது ஜனாதிபதியோ, அமைச்சர்களோ அதற்கு செவிசாய்க்கத் தவறியதனால் மக்கள் தொடர்ந்தும் கோருவதில் பயனில்லை என தீர்மானித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே கோட்டாபயவை வீடு செல்லுமாறு மக்கள் கோரியதாகவும் அந்த வீட்டில் ரணில் வந்து அமருவதை மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam