சீன நிறுவனத்திற்கு நட்டஈடு வழங்குவதில் எவ்வித தவறும் இல்லை! மஹிந்தானந்த
சீன சேதன பசளை நிறுவனத்திற்கு நட்டஈடு வழங்கியதில் எவ்வித தவறும் கிடையாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விவகாரம் குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சீன நிறுவனம் 5 மில்லியன் பிணையொன்றை வைத்து, உரிய தரத்தில் உரத்தை வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் மீளவும் சீனாவிற்கு திரும்பிச் சென்று சரியான முறையில் உரத்தை தயாரித்து, அதனை பரிசோதனை செய்து மீண்டும் இலங்கைக்கு உரம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் போது அரசாங்கத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் எமக்கு உரம் கிடைக்காமையே ஒரே பிரச்சினையாகும் எனவும், நிதி நட்டம் ஏற்படவில்லை எனவும் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam