‘‘அரசத்துறை பங்குகளை தனியாருக்கு வழங்குவதில் தவறில்லை’’
அரச நிறுவனங்களையோ, அரச மற்றும் வளங்களில் பங்குகளில் முதலீடு செய்ய தனியார் துறையினரை சம்பந்தப்படுத்திக்கொள்வதில் எந்த தவறும் இல்லை என ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ (Aruntika Fernando) தெரிவித்துள்ளார்.
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ராஜாங்க அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
முன்னேற முயற்சிக்கும் நாடு என்ற வகையில் வெளிநாட்டு கடன்களையோ, முதலீடுகளை பெற்றுக்கொள்வது அத்தியவசியமான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வளங்களில் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் போது, நிபந்தனைகளை விதித்து மக்கள் பெற்று வரும் உரிமை முதலீட்டாளர்களுக்கு கிடைக்காத வகையில் முன்னேற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக்கொடுப்பது அத்தியவசியமானது.
பிரான்ஸ் முழு ரணில் சேவையையும் தனியார் மயப்படுத்தியுள்ளது எனவும் அருந்திக பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.